காசி ஆனந்தன் நறுக்குகள்
December 26, 2008 at 1:27 p12 | Posted in Uncategorized | Leave a comment

கூடு
சொந்த வீடு
கட்டுகிறது
குருவி…
நான்
குடியிருக்கும்
வாடகை
வீட்டில்
களம்
இது
எப்படி ?
தோழா?
நஞ்சை
உண்டது
நீ…
செத்து
விழுந்தது
அவன்
பாய்ச்சல்
பதுங்க
அல்ல
எங்கள்
மண்ணின்
பதுங்கு குழிகள்…
பதுங்கித்
தாக்க
பங்கு
எதிரிக்கு தெரியாமல்
சோறு போடுகிறாள்
கிழவி
போராளிக்கு…
நினைக்கலாம்
நீ
அவனுக்கு
அவள்
உயிருட்டுவதாய்
இல்லை
அவன் சாவில்
பங்கு
கேட்கிறாள்
கிழவி.
நெருப்பு
நெருப்பில்
சேரி
எரித்தகாலம்
நேற்று
நில் !
நெருங்காதே
சேரி
எரியும் காலம்
இன்று
Advertisement
Leave a Comment »
RSS feed for comments on this post. TrackBack URI
Leave a Reply
Blog at WordPress.com. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.