தமிழ்நாட்டில் நந்திகிராமம் மாங்கால் சிற்றூரா?
October 6, 2008 at 1:27 p10 | Posted in Uncategorized | Leave a commentஅக்டோபர் 4 தினசரிகளில் குறிப்பாக தமிழோசை, ஆங்கில நாளிதழ்களான டிகான் கிரானிக்கல் மற்றும் நியு இன்டியன் எக்ஸ்பிரஸ் மேற்கண்ட தலைப்பையொட்டி செய்திகள் வெளியுட்டள்ளது. குறிப்பிட்டுள்ள நாளிதழ்களுக்கு தமிழ்நாட்டிலும் நந்திகிராமம் போன்ற நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்ற ஆசை இருப்பது வேறு செய்தி.
நிகழ்வு1. மேற்கு வங்கத்தில் தொழில் மைய நடவடிக்கையான சிறப்பு பொருளாதார நடவடிக்கையை எதிர்த்து அப்பகுதி கிராமமக்கள் வாழ்உரிமைக்காக இன்றும் போராடிக்கொண்டு இருகிறார்கள். பல உயிர்களை இழந்திருகிறார்கள். யாரை எதிர்த்து ? தொழிலாளர்களின் தோழன் !? கம்யூனிஸ்டுகளை எதிர்த்து , பன்நாட்டு முதலாளிகளுக்கு சிவப்புக் கொடி விரித்து மன்னிக்கவும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.எற்கனவே உள்ளூர் முதலாளிகளின் சாம்ராஜ்ஜியத்தில் செங்கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது .நந்திகிராம மக்களை பார்த்து சிரிக்கிறது.
நிகழ்வு 2. அதே மேற்கு வங்கம். ஊர் பெயர் இப்போது மாறி இருக்கிறது. ஆம் சிங்குர். அட இங்கேயும் கம்யூனிஸ்டுகள் வரலாறு படைக்கிறார்கள். காம்ரேடு ரத்தன் டாடா இப்போது அவர்கையில் செங்கொடி. ரூபாய் 1,00,000யில் கார் உற்பத்திசெய்யப் போகிறாராம்.எல்லோர் கையில் செல்போன் இருப்பது போல எல்லோரும் காரிலேயே செல்லலாம்.எழைக்கும் கார் பணக்காரனுக்கும் கார். மார்க்சிஸ்டுகளின் கொள்கை மெல்ல மெல்ல பலித்துக்கொண்டுவருகிறது.எல்லாம் சரி தொழிற்சாலை கட்ட போகும் 1000ஏக்கரில் 400ஏக்கர் விளை நிலம். உழவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட்து. பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் காம்ரேடு ரத்தன் டாடா மூலம் செயல்படுத்தப்படுகிறது. உழவர்களின் தீவிர எதிர்ப்பால் காம்ரேடு ரத்தன் டாடா இப்போது வேறு இடத்திற்கு கடையை கட்டுகிறாராம். முதல்வர் புத்ததேவ் கடைசி முயற்சி செய்தும் டாடா டாட்டா காட்டிவிட்டாராம்.
நிகழ்வு 3. அக்டோபர் 2 தேசத்தந்தை காந்தி பிறந்தநாள்.எல்லா ஊராட்சி அமைப்புகளும் அன்று கூடுகிறது. ஆனால் 10 கிராம சபைகள் மட்டும் வித்தியாசமாக முடிவைஎடுக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்களால் எங்களுக்கு எவ்வித பயனும் இல்லை. குறிப்பாக மாங்கால் ஊராட்சித்தலைவர் திரு தமிழினியன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு மக்களுக்காக போராடி வருகிறார். மாத்தூரில் 1997ல் 650ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட்து. இந்நாள் வரை பயன்படுத்தாமல் கடந்த ஆண்டு 2007ல் தான் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படட்து. அரசு அறிவித்தப்படி தொழிற்சாலையில் உள்ளூர் உழவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. உழவர்கள் போராடி 30 பேருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றனர்.
நிகழ்வு 3. அக்டோபர் 2 தேசத்தந்தை காந்தி பிறந்தநாள்.எல்லா ஊராட்சி அமைப்புகளும் அன்று கூடுகிறது. ஆனால் 10 கிராம சபைகள் மட்டும் வித்தியாசமாக முடிவைஎடுக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்களால் எங்களுக்கு எவ்வித பயனும் இல்லை. குறிப்பாக மாங்கால் ஊராட்சித்தலைவர் திரு தமிழினியன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு மக்களுக்காக போராடி வருகிறார். மாத்தூரில் 1997ல் 650ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட்து. இந்நாள் வரை பயன்படுத்தாமல் கடந்த ஆண்டு 2007ல் தான் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படட்து. அரசு அறிவித்தப்படி தொழிற்சாலையில் உள்ளூர் உழவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. உழவர்கள் போராடி 30 பேருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றனர்.
இந்நிலையில் அக்டோபர் 2ம் தேதியன்று நடைப் பெற்ற சிற்றூர் அவைக் கூட்டங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள 10 ஊராட்சிகளிலும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாத்தூர் ஊராட்சித் தலைவர் தமிழினியன் தலைமையில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ,இந்தியா சிற்றூர்களில் வாழ்கிறது என்றார் காந்தி. சிற்றூர் மக்களின் தொழிலான உழவுத்தொழிலை மேன்மையுற செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரால் நாடெங்கும் உழவர்களின் விளைநிலங்கள் பறிக்கப்படும் கொடுமை நடைபெற்று வருகிறது.
சிறப்பு பொருளாதார மண்டலங்களால்
1. எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி கிடைக்க வில்லை.
2. உழவர்களுக்கு வேலைக்கு உத்திரவாதம் இல்லை.
3. தொழிற்சலைகளால் சுற்றுச்சூழல் மாசு
4. உழவர்கள் சொந்த மண்ணை விட்டு அகதிகலாகும் நிலைமை.
நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிட தீர்மானங்கள் நிறைவேற்றிய 10 ஊராட்சி அமைப்புகளை பாராட்ட வேண்டும். மாத்தூர் ஊராட்சித் தலைவர் தமிழினியன் அவர்களின் ஒருங்கிணைப்பு முயற்சி உழவர்களை மேன்மைக்கு கொண்டு செல்லும். உழவர்கள் ஒத்துழைப்பு எந்த எல்லைவரை செல்லும். மேற்கு வங்கம் நந்திகிராமம் நமக்கு பாடம் சொல்லித் தருமா?
அன்புடன்..
Leave a Comment »
RSS feed for comments on this post. TrackBack URI
Leave a Reply
Blog at WordPress.com. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.
